SEJARAH

இப்பள்ளி 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பள்ளி ஒரு கிடங்கில் ஆரம்பிக்கப்பட்டது. 20 மாணவர்களுடன் ஆசிரியர் திரு.அந்தோனிசாமி அவர்கள் தன் கல்வி பயணத்தை இங்கு தொடங்கினார். 1972ல் மாணவர் எண்ணிக்கை 60-ஆக அதிகரித்தது. அப்போது பள்ளியின் பெயர் தேசிய வகை பெம்புருக் தோட்டத் தொடக்கப்பள்ளி.

திரு.இராமச்சந்திரன் அவர்கள் பணியாற்றிய காலக்கட்டத்தில் 1995 மாணவர்கலின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்த்தது. 11 ஆசிரியர்களும் ஒரு அலுவல் உதவியாளர், 2 தோட்டக்காரர்களும் பணியாற்றினர். இக்காலக்கட்டத்தில் 2 கட்டடங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்தது. 1997-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 5A, 4A மற்றும் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 பேர் ஆவர். 1997-ல் பள்ளியின் பெயர் தேசிய வகை நடேசப்பிள்ளையாக மாற்றம் கண்டது. இப்பெயர் பள்ளி மேம்பாட்டுக்காக பெரும் பங்காற்றிய தோட்ட மேலாளர் திரு.நடேசப் பிள்ளை அவர்களை முன்னிட்டு வைக்கப்பட்டது. தற்போது 76 மாணவர்களுடன் செயல்படும் இப்பள்ளி கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குகிறது. தற்போது  76 மாணவர்களோடும் 14 ஆசிரியர்களோடும் 5 பணியாளர்களோடும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 2 கட்டடங்களையும் 1 சிற்றுண்டிச்சாலையையும் கொண்டுள்ளது. இதில் 1 அலுவலகம், 1 தலைமையாசிரியர் அறை, 3 துணைத்தலைமையாசிரியர் அறை, 1
கணினி அறை, 1 ஆசிரியர் அறை, 6 வகுப்பறைகள், 1 குறைநீக்கல் அறை, 1 நடவடிக்கை அறை, 1 பாட புத்தக அறை, 1 நூலகம், 1 பாலர் பள்ளி  ஆகியவை உள்ளன. பள்ளி வளாகத்தில் ஒரு திடலும் உண்டு.

1959-இல் 20 மாணவர்களில் தொடங்கிய இப்பள்ளி 1995-இல் 200 மாணவர்களாக உயர்ந்தது. பிறகு இடைப்பட்ட காலத்தில் அதாவது 2000 ஆம் ஆண்டின் போது சுமார் 168 மாணவர்களே பயின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய காலக்கட்டத்தில் 79 மாணவர்களே பயில்கின்றனர்.

1959-இல் ஓர் ஆசிரியர் மட்டுமே இப்பள்ளியில் கல்விப் பயணத்தை தொடக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 1980-இல் 4 ஆசிரியர்கள் மட்டுமே இப்பள்ளியில் பணியாற்றினர். 1995-இல் 11 ஆசிரியர்களும் ஒரு அலுவல் உதவியாளர், 1 தோட்டக்காரர்களும் பணியாற்றினர். பிறகு, 2000-ஆம் ஆண்டில் 13 ஆசிரியர்களும் இரண்டு அலுவல் உதவியாளர்களும், 2 தோட்டக்காரர்களும் பணியாற்றினர். தற்போதைய காலத்தில் 14 ஆசிரியர்களும், 2 அலுவல் உதவியாளர்களும் 2 தோட்டக்காரர்களும் பணியாற்றி வருகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம் 30 அக்டோபர் 1973-இல் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாண்டு 42-வது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதன் தற்போதைய தலைவர் திரு. உதயகுமார் /பெ தேவதாஸ். இதன் முன்னாள் தலைவர் திரு. மகேந்திரன் /பெ சுப்ரமணியம். இச்சங்கம் பள்ளி மாணவர்களின் கல்வி, புறப்பாடம், மாணவர் நல மேம்பாடு, கட்டிடப்பராமரிப்பு, ஆகியவற்றிற்கு பெரும் துணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பின்வரும் நிகழ்வுகள் இச்சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் நிகழ்வுகளாகும்.
1)   பள்ளி திடல்தடப் போட்டி விளையாட்டு ஏற்பாடு.
2)   பள்ளி பரிசளிப்பு விழா ஏற்பாடு
3)   யு.பி.எஸ்.ஆர் பாடப்புத்தக அன்பளிப்பு
4)   பள்ளி நிகழ்வுகளுக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்தல்.
5)   யு.பி.எஸ்.ஆர் பட்டறை உணவு பங்களிப்பு
6)   மாணவர்களுக்கு தன்முனைப்பு முகாம்.
7)   பொங்கல் விழாவின் ஏற்பாடு
8)   பள்ளி கூட்டுப்பணி ஏற்பாடு
9)   முதலாம் ஆண்டு வகுப்பறை சீரமைப்பு
10) ரிமூப் (RIMUP) நிகழ்வு

பல தலைமையாசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றி வந்துள்ளனர்:

1957 முதல் 1960              :      திரு. அந்தோனிசாமி
1960 முதல் 1976               :      திரு துரைகண்ணு
1976 முதல் 1981               :      திரு.முனுசாமி
1981 முதல் 1990               :      திரு.சூரிய நாராயணன்
1990 முதல் 1995               :      இராமசந்திரன்
1995 முதல் 1998               :      திரு.அப்ரஹாம்
1998 முதல் 2000               :      திரு.மாரிமுத்து
2000 முதல் 2003               :      திரு.கிருஷ்ணன்
2003 முதல் 2004               :      திரு.பொன் சுப்ரமணியம்
2004 முதல் 2005               :      திரு.நளராஜன்
2005 முதல் 2007               :      திருமதி.கெளரி
2007 முதல் 2009               :      திருமதி.கோமதி
2009 முதல் 29.06.2011                 :      திரு.கதிர்காமன்
30.06.2011 முதல் 15.09.2014           :      திரு.பழனி
16.09.2014 முதல் தற்போது வரை   :      திருமதி.கா.குமுதா

Comments

Popular posts from this blog

Kavipadum Thendral 2019